நேற்று தண்ணீர் குண்டுகள்; இன்று ரப்பர் குண்டுகள்; மியான்மரில் வலுக்கும் போராட்டம்!
மியான்மர் முழுவதும் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று தடையை மீறி பேரணிகளை நடத்தியதால், பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் நீர் பீரங்கி, கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி விரட்டியடிக்க முயற்சித்தனர்.
தலைநகர் நெய்பிடாவில் ரப்பர் தோட்டாக்களால் பொலிசார் சுட்டதில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் பெண் ஒருவர் , தலையில் காயத்துடன் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
நாட்டின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக புதிய ஆட்சிக்குழுவின் எச்சரிக்கை இருந்தபோதிலும், பொதுமக்கள் தலைவர் ஆங் சான் சூகியை சிறையிலிருந்து விடுவிப்பதற்காக கடந்த வாரம் நடந்த சதித்திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து நான்காவது நாள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முந்தைய இராணுவ ஆட்சியால் கட்டப்பட்ட புதிய தலைநகரமான நெய்பிடாவில், முன்னர் தண்ணீர் பீரங்கிகளால் விரட்டியடித்த பின்னும் போராட்டக்காரர்கள் குவிந்து வருவதால், அவர்கள் மீது ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி பொலிசார் சுட்டனர்.
நெய்பிடாவில் உள்ள ஒரு மருத்துவமனை உறவினர்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க அனுமதிக்காது என்பதால், எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையே நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில், எதிர்ப்பாளர்களைக் கலைக்க பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.