ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இதன்படி பெண்கள் வெளியே செல்லவும், கல்வி கற்கவும் பணிபுரியவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அங்கு பெண் உரிமை, பாலினம் உள்ளிட்டவை குறித்து பெண்கள் எழுதிய புத்தகங்கள், பல்கலைக்கழக பாடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள புதிய கல்விச் சட்டத்தின்படி தலிபான்கள் கொள்கைகள் மற்றும் ஷரிஆ சட்டத்திற்கு எதிராக இருப்பதால் பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள், ஈரானிய எழுத்தாளர்களின் 310 புத்தகங்கள் என மொத்தமாக 680 புத்தகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஷரிஆ சட்டத்துடன் முரண்படுவதாகக்கூறி, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழக பாடங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.