பொலிஸ் பயிற்சியில் 7 வயது கனேடிய சிறுவன்: தாயார் கூறிய நெகிழ்ச்சி பின்னணி
கனடாவில் வாட்டர்லூ பிராந்தியத்தில் உள்ள குழந்தைகள் குழு ஒன்று பொலிஸ் பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை முதல் குறித்த குழந்தைகள் குழுவானது பொலிஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் 7 வயதான Jaxon Kgamane தெரிவிக்கையில், பொலிசார் மக்களுக்கு உதவுகிறார்கள் என்பதாலையே, தாம் பொலிசாக வேண்டும் என ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
காவல் துறையில் பொலிசாரின் பணி என்ன என்பதை சிறார்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இந்த ஏற்பாடு என தெரிவித்துள்ளார் பொலிஸ் அதிகாரி ஒருவர்.
சிறுவன் Jaxon Kgamane-ஐ பொறுத்தமட்டில், கடந்த ஆண்டு இக்கட்டான சூழலில் தமது தாயாரின் உயிரை காப்பாற்றியதாலையே, தற்போது பொலிஸ் பயிற்சி வகுப்புகளில் இணைக்கப்பட்டுள்ளான்.
ஜாக்சனின் தாயார் தமது மகன் தொடர்பில் தெரிவிக்கையில், சம்பவத்தின் போது நாங்கள் இருவரும் மட்டும் வீட்டில் இருந்தோம். அப்போது நான் மிகவும் நோய்வாய்ப்பட்டேன். நள்ளிரவில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை உணர்ந்த அவர், உடனையே உதவி தேவை என அறிந்து முயற்சிகள் மேற்கொண்டார்.
இதனையடுத்து மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட குறித்த பெண்மணி, ஒருவார காலம் கோமாவில் இருந்துள்ளார்.
தமது மகனின் சமயோசித முடிவே தாம் உயிருடன் மீண்டுவர காரணமாக அமைந்துள்ளது என்கிறார் அந்த தாயார்.
இந்த நிலையில், வாட்டர்லூ காவல்துறையால் இரக்கத்திற்கான விருது பெற்றார் சிறுவன் ஜாக்சன்.