சீனாவில் தங்கத்தை விழுங்கிய சிறுவன் ; 5 நாட்கள் மகனை வீட்டுக்குள் அடைத்த தாய்
சீனாவில் சிறுவன் ஒருவன் தங்கத்தை விழுங்கியதால், அவனது தாய் அவனை எங்கும் செல்லவிடாமல் வீட்டில் 5 நாட்களாகப் பாதுகாத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஜியாங்கு பகுதியினைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவர் 10 கிராம் தங்கத்தினை தெரியாமல் விழுங்கியுள்ளான்.

உடனே அதனைத் தனது தாயிடம் தெரிவித்துள்ளான். ஆரம்பத்தில் விளையாட்டாக எடுத்துக் கொண்ட தாய், அதன் பின்பு உண்மையையறிந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் குறித்த சிறுவனை வெளியே விடாமல் வீட்டுக்குள் வைத்து ஐந்து நாட்கள் மலம் கழிக்க வைத்துள்ளார். ஆனாலும் சிறுவன் விழுங்கிய தங்கம் வெளியே வரவில்லை.
இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தங்கத்தை எடுத்ததாகக் கூறியுள்ளார். ஆனால் தங்கம் எவ்வாறு வெளியேற்றப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும், சிறுவன் விழுங்கிய தங்கத்தின் விலை 10 ஆயிரம் யுவான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.