பிரம்டன் ஊடகப் பிரபலம் மீது வீட்டின் எதிரிலேயே கொடூர தாக்குதுல்
ஊடக பிரபலம் ஒருவர் மீது தாக்குதல் பிரபல ரியல் எஸ்டேட் முகவரும் ஊடகப் பிரபலமான ஜோதி சிங் மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பகல் வேளையில் வீட்டுக்கு எதிரிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது கத்தி வாழ் மற்றும் கோடாரி ஆகியவற்றை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜோதி சிங் மான் என்ற ஊடக பிரபலம் மீது மூன்று பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தனது வாகனத்தில் பயணிப்பதற்கு ஆயத்தமான போது திடீரென வந்த இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கருப்பு நிற ஆடை அணிந்து முக கவசங்களையும் அணிந்து இந்த நபர்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல்லை அவதானித்த குறித்த நபரின் தாயார் சம்பவ இடத்திற்கு வருகை தரும் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
சிங் இந்தியாவில் இடம்பெறும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தனது சமூக ஊடக வலை அமைப்புகளில் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தது.
இந்த தாக்குதல் முயற்சியானது நிச்சயமாக ஓர் கொலை முயற்சி என பிராம்டன் மேயர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பீல் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் நடுப்பகல் வேளையில் அவரது இல்லத்திற்கு எதிரிலேயே இவ்வாறு இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.