பிரேசிலில் ஓரே நாளில் 2,311 பேர் கொரோனாவுக்கு பலி
பிரேசிலில் கொரோனா தொற்றினால் ஓரே நாளில் 2,311 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதன் மூலம் மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,25,540 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு ஒரு நாளில் 72,715 பேருக்கு கொரோான தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்ககை 15,282,705 ஆத அதிகரித்துள்ளது. பிரேசிலில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் உறுதி செய்யப்பட்டது. உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ளது.
பிரேசிலில் கொரோனா புதிய அலையினால் தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதனால் நோயாளிகளின் அதிகரிப்பை கையாள முடியாத வைத்தியசாலைகள் திண்டாடுகிறது. இதுவரை பிரேசிலில் மொத்தம் 53.9 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அவர்களில், 35.9 மில்லியன் பேருக்கு (சனத்தொகையில் 16.96 சதவிகிதம்) முதலாவது தடுப்பூசியும் மற்றும் 18 மில்லியன் பேருக்கு (சனத்தொகையில் 8.54 சதவிகிதம்) இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.