பிரித்தானியாவில் இன்னும் சில வாரங்களில் பாரிய ஏற்றம் காணவுள்ள பாண் விலை
பிரித்தானியாவில் எதிர்வரும் சில வாரங்களில் பாண் விலையானது 20 சதவீதம் அதிகரிக்கவுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் தற்போது ரீதி தயாரிக்க மிக முக்கிய பொருளான கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த ஆண்டில் கோதுமையின் விலை 26.7 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்ததுடன், போக்குவரத்துக்கான எரிபொருள் மற்றும் பாண் சுடுவதற்கான அவன்களில் பயன்படுத்தப்படும் எரிவாயு போன்ற மற்ற பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.
இந்த விலை உயர்வினை வியாபாரிகள் சிலர் ஏற்றுக்கொள்வார்கள் என்ற போதிலும், பல்பொருள் அங்காடிகளை வந்தடையும் பொருட்களின் விலை உயர்வை தடுக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோக, உலகம் முழுவதும் உணவுப்பொருட்களின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பாஸ்தாவின் விலையும் சமீபத்திய சில வாரங்களில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.