பிரான்ஸை தொடர்ந்து பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பிரிட்டன் முடிவு
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்தது. இந் நிலையில், தற்போது பிரிட்டனும் அங்கீகாரம் பெறுவதை பிரிட்டன் ஆதரிப்பதாக பிரிட்டன் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
நாங்கள் பாலஸ்தீன அரசை ஆதரிக்கிறோம், அதை விரும்புகிறோம், மேலும் இதுபோன்ற நீண்டகால அரசியல் தீர்வு ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாக்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம்.
ஆனால் இப்போது, இன்று, துன்பத்தைத் தணிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் . மேலும் காசாவில் உள்ள தீவிரமான, நியாயப்படுத்த முடியாத துன்பங்களை நாங்கள் கையாள்கிறோம், அதுதான் இன்று நமது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
அதோடு பிரான்ஸில் இந்த முடிவுக்கு அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.