நடு வீதியில் விழுந்து நொறுங்கிய விமானம் ; தீயில் சிக்கி எரிந்த வாகனங்கள்
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள ப்ரெஷியா நகரத்தில் ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில், மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர் மற்றும் அவரது 60 வயதான தோழி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
நெடுஞ்சாலையில் விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது, இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தைப் பதிவு செய்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
நெடுஞ்சாலையில் சென்ற சில வாகனங்களும் தீயில் சிக்கி எரிந்தன, அதில் இரண்டு ஓட்டிகள் காயமடைந்தனர்.
விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.