போர் நீளும் நிலையில் பிரித்தானிய பிரதமர் உக்ரைன் அதிபர் உரையாடல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் முடிவுக்கு வராது நீளும் நிலையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் (Boris Johnson) பல விஷயங்கள் குறித்து தொலைபேசியில் விவாதித்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கான பாதுகாப்பு ஆதரவை வலுப்படுத்துவது, பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் உக்ரைனுக்கு எரிபொருளை வழங்குவது குறித்து இருவரும் உரையாடியதாக ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.
இதன்போது , உணவு நெருக்கடியைத் தடுக்கவும், உக்ரேனிய துறைமுகங்களை பாதுகாப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார் .
மேலும் கிழக்கில் உக்ரைன் பாரிய இழப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், ரஷ்யா டான்பாஸ் பிராந்தியத்தில் மேலும் முன்னேறாமல், அதை பாதுகாக்கும் வகையில் அவர்களின் உரையாடல் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.