இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் ; கொன்று குவிக்கப்பட்ட மக்கள்
ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதால், இஸ்ரேல், தனது கவனத்தை காஸா பக்கம் திருப்பி உள்ளது.
வடக்கு காஸாவில் வசிக்கும் பலஸ்தீனியர்கள் உடனடியாக மொத்தமாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல்
இதன்மூலம் ஹமாஸ் இயக்கத்தினர் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்க இருப்பது தெளிவாகிறது. இந்நிலையில் காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் உணவகம் மற்றும் உணவு தேடி வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 74 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக இஸ்ரேலியப் படைகள் காஸாவில் கடலோர ஹோட்டலில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர், மேலும் போரினால் பாதிப்பட்ட பலஸ்தீனியர்கள், தங்களுக்கு தேவையான உணவு உதவியைப் பெற முயன்றபோது துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டனர் என்று அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
"எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென்று, ஒரு போர் விமானம் அந்த இடத்தைத் தாக்கியது, நிலநடுக்கம் போல அதை உலுக்கியது" என்று சுகாதார அமைச்சகத்தின் அவசர மற்றும் ஆம்புலன்ஸ் சேவையின் தலைவர் பாரெஸ் அவாட் தெரிவித்தார்.