தொலைபேசியில் வந்த அழைப்பு... பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் உறவினர் குடும்பம் ஒன்றை நலம் விசாரிக்க பொலிசாரின் உதவிய நாடிய நபரால் துயர சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், இரண்டு சிறார்கள் உட்பட ஐவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
உறவினர்கள் தொடர்பில் நலன் விசாரிக்க பெண் ஒருவரால் விடுக்கப்பட்ட தொலைபேசி கோரிக்கையை ஏற்று பொலிசார் தொடர்புடைய குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.
புதன்கிழமை பகல் 11.12 மணிக்கு அந்த குடியிருப்புக்கு சென்ற பொலிசார், வீடு பூட்டப்பட்டிருந்ததை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில், வலுக்கட்டாயமாக அந்த வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
அவர் உள்ளே நுழைந்து தேடியதும், 2 சிறார்கள் உட்பட ஐவரின் சடலங்களையும் கண்டுள்ளனர். முதற்கட்ட சோதனையில் அவர்கள் ஏற்கனவே இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கையில், அந்த குடும்பம் அடிக்கடி நண்பர்களை அழைத்து விருந்து வைப்பதை கவனித்துள்ளதாகவும், அந்த வீட்டின் இரு பிள்ளைகளும் வெளியே விளையாடுவதையும் பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களின் இறப்பு கொலை அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவும் இல்லை என கூறியுள்ளனர்.