பல்கேரியா பேருந்தில் திடீர் தீ விபத்து - குறைந்தது 46 பேர் உயிரிழப்பு
மேற்கு பல்கேரியாவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் தீயில் சிக்கி குறைந்தது 46 பேர் உயிரிழந்ததாகவும் 7 பேர் காப்பாற்றப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனார்.
குறித்த சம்பவம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்குப் பிறகு போஸ்னெக் கிராமத்திற்கு அருகே நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதுபற்றி வடக்கு மாசிடோனியாவின் வெளியுறவு அமைச்சர் Bujar Osmani கூறுவதாவது, பேருந்தில் பயணித்தவர்கள் இஸ்தான்புல்லுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, தலைநகர் ஸ்கோப்ஜேக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என அமைச்சக அதிகாரி நிகோலாய் நிகோலோஃப் பிடீவி தனியார் தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளார். இருப்பினும் பேருந்தில் தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவான தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.