மொத்தம் 28 பெண்கள்... கல்கரி மருத்துவர் வழக்கில் முக்கிய திருப்பம்
பெண் நோயாளிகளை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய கல்கரி மருத்துவரை பிணையில் விடுவிக்க பாதிக்கப்பட்ட பெண்கள் மறுப்பு தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் பரோல் வாரியம் குறித்த முடிவை வெள்ளிக்கிழமை பகல் உறுதி செய்து அறிவித்துள்ளது.
Keith Hoyte என்ற ஓய்வுபெற்ற பிரபல நரம்பியல் மருத்துவர் சுமார் 30 ஆண்டு காலம் 28 பெண் நோயாளிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக எழுந்த புகாரில்,
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார்.
8 மாதங்கள் கடந்த நிலையில், பிணை கேட்டு மனு அளித்திருந்த மருத்துவருக்கு தற்போது கனடாவின் பரோல் வாரியம் மறுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில் குறித்த மருத்துவரால் பாதிக்கப்பட்ட ஐவர் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ள நிலையில், அவருக்கு பிணை மறுக்க முக்கிய காரணமாக அதை பார்க்கப்படுகிறது.
16 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறேன், அவருக்கு வெறும் 3 ஆண்டுகள் தான் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண் கண்கலங்கியுள்ளார்.
உண்மையில் நடந்த சம்பவங்களில் அவருக்கு வருத்தம் இருந்தால், இந்த 3 ஆண்டுகளும் அவர் பிணையில் வெளிவராமல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் தமக்கு மன வருத்தம் உள்ளது எனவும், கண்டிப்பாக தாம் தவறிழைத்ததை ஒப்புக்கொள்கிறேன் என மருத்துவர் Keith Hoyte தெரிவித்துள்ளார்.