பிரித்தானிய மக்களை காப்பாற்ற முடியாது!
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அரசால் முடியாது என பிரித்தானிய நிதி அமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak)கூறியுள்ள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் “அதிகரித்து வரும் பணவீக்கத்திலிருந்து மக்களை முழுமையாக பாதுகாக்க முடியாது, பணவீக்கம் 40 ஆண்டுகளில் 9% என்ற மிக உயர்ந்த அளவுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வந்த எரிசக்தி விலை உயர்வால் இந்த எண்ணிக்கை உந்தப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த உலகளாவிய சவால்களிலிருந்து மக்களை நாங்கள் முழுமையாகப் பாதுகாக்க முடியாது தெரிவித்த அவர் , ஆனால் எங்களால் முடிந்தவரை குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்குவதுடன், நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் ரிஷி சுனக் (Rishi Sunak)கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.