பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிமலைச் சரிவில் சிக்கி 4 பேர் காயம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிமலைச் சரிவில் சிக்கி நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் கிழக்கு பகுதியில் இரண்டு பனிமலைச் சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் இதில் இரண்டு பேர் படுகாயமடைநதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிவல்ஸ்டோக் பகுதியில் இடம்பெற்ற பனிமலை சரிவில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
செர்ரிவில் தெற்கு பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு பனிமலைச் சரிவில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் வால்மவுன்ட் பகுதியில் இடம்பெற்ற பனிமலைச் சரிவில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்வேறு பகுதிகளில் பனிமலை சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அறிவுருத்தல் வழங்கப்பட்டுள்ளது.