கனடாவில் இவர்களுக்கு மட்டும் அனுமதி இல்லை: தடுப்பூசி தொடர்பில் மீண்டும் கடும்போக்கு
கனடாவில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்படாத தொழில்முறை மற்றும் அமெச்சூர் விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை அமைச்சர் மார்கோ மென்டிசினோ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இதனால், தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள NBA, NHL, MLB மற்றும் MLS அணிகளை சேர்ந்த தடுப்பூசி இதுவரை போட்டுக்கொள்ளாத வீரர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்றே தெரிய வந்துள்ளது.
ஜனவரி 15ம் திகதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திருத்தத்தால் NBA மற்றும் NHL வீரர்களே பாதிப்புக்கு உள்ளாவார்கள் என கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த அணிகளில் தடுப்பூசி போடப்படாத வீரர்களின் சதவீதம் மிகக் குறைவு என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. NBA தங்களது 95 சதவீத வீரர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக சீசனுக்கு முன்பே அறிவித்தது.
மட்டுமின்றி, சமீபத்தில் தங்கள் வீரர்களை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் கோரியிருந்தது. கனேடியரும் Golden State Warriors அணி வீரருமான Andrew Wiggins தெரிவிக்கையில், NBA விளையாட வேண்டும் என்றால், கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், அதையே நானும் பின்பற்றியுள்ளேன் என்றார்.
NHL அணிகளில் நால்வர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பானது விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமில்லாமல், சர்வதேச மாணவர்கள், வேலை செய்ய உரிமம் பெற்ற தனிநபர்கள், டிரக் சாரதிகள் உட்பட அத்தியாவசியப்பணி ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட உள்ளனர் என்றே தெரியவந்துள்ளது.