கனடாவில் மாஸ்க் அணிய மறுத்த பயணி; டாக்ஸி டிரைவரின் அதிரடி நடவடிக்கை
புத்தாண்டு அன்று கனடாவின் வேன்கோவர் ட்ரோவ் பகுதியில் ஒருவர் குடிபோதையில் டாக்ஸி ஒன்றை புக் செய்துள்ளார். அத்துடன் அவர் டாக்ஸிக்குள் ஏறும்போது டாக்ஸியின் டிரைவர் அவரை மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தியுள்ளார்.
எனினும் குடிபோதை ஆசாமி அதை மதிக்காமல் மாஸ் அணியாமல் டாக்ஸிக்குள் ஏறியது மட்டுமல்லாமல் டிரைவரின் முகத்தை எல்லாம் தொட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த டாக்ஸி டிரைவர் பொலிசாருக்கு தொடர்பு கொண்டு நடந்ததைச் சொல்லியுள்ளார்.
அவர்கள் அருகிலிருக்கும் பொலிஸ் ஸ்டேஷனிற்கு செல்ல அறிவுறுத்திய நிலையில் டாக்ஸி டிரைவர் நேரடியாகக் காரை அருகில் உள்ள விக்டோரியா பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று அங்கு நடந்ததைச் சொல்லியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் அந்த போதை ஆசாமியை காரிலிருந்து இறங்கும்படி கேட்கவே, அவர் மறுத்து நிலையில் அவரை வல்லுகட்டாயமாக காரிலிருந்து இறக்கி அவர் மீது , மாஸ் அணியாதது, மற்றவர்களுக்கு நோயைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டது.
பொலிசாரின் உத்தரவை மதிக்காமலிருந்தது, பொதுவெளியில் அதிக மதுபோதையில் சுற்றியது என பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க இந்த உலகமே போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற சில நபர்களால் இந்த உலகமே அச்சத்தில் உள்ளனர்.
மேலும் குறித்த போதை அசாமியை பொலிஸ் ஸ்டேஷன் கொண்டு சென்ற டாக்ஸி டிரைவரை பலர் சமூகவலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.