மலையேறுபவர்கள் கண் முன்னே 1,000 அடி உயரத்திலிருந்து விழுந்த கனேடியர்
மலையேற்றத்துச் சென்ற கனேடியர் ஒருவர், 1,000 அடி உயரத்திலிருந்து விழும் பயங்கரக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள் சக மலையேறுவோர்.
நேற்று அலாஸ்காவின் டெனாலி மலைகளில் மலையேற்றத்துக்குச் சென்ற கனடாவின் பர்னபியைச் சேர்ந்த Adam Rawski (31) என்பவர், 1,000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவர் ஹெலிகொப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Adamஐப் போன்றே மலையேற்றத்துக்கு வந்திருந்த பலர் அந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் மூழ்கினார்கள்.
Adam விழுந்ததும் அவரைத் தேடிச்சென்ற வழிகாட்டிகள் (guides), அவர் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்ததாக தெரிவித்துள்ளார்கள்.
இந்த ஆண்டு மலையேற்றத்தின்போது விபத்தில் சிக்கிய மூன்றாவது நபராவார் Adam. இம்மாதம் (மே மாதம்) 3ஆம் திகதி, பனிச்சறுக்கு செய்த ஒருவர் தவறி விழுந்து இறந்துபோனார்.
10 நாட்களுக்குப் பிறகு, இரண்டு பேர் மலையேறும்போது, ஒரு பனிக்கட்டி உடைந்து அவர்கள் மீது விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டதும் மற்றவர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.