கனடாவில் புயலில் சிக்கி சேதமான கப்பல்களின் எண்ணிக்கை வெளியானது
பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பகுதியில் புயலின்போது சிக்கி சேதமான, மூழ்கிய அல்லது கரைத்தட்டிய கப்பல்களின் எண்ணிக்கையை கனேடிய கடற்படை கண்காணித்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவை புரட்டிப்போட்ட புயல் மற்றும் கனமழையால் மாநிலத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது.
பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புயலின்போது சிக்கிய கப்பல்கள் தொடர்பில் கனேடிய கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது. பொதுவாக கப்பல் அல்லது படகு விபத்து தொடர்பில் நாளில் ஒரு புகார் மட்டுமே பதிவாகும் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள்,
கடந்த திங்கட்கிழமை மட்டும் 15 கப்பல்கள் தொடர்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த நாள் 7 கப்பல்கள் தொடர்பில் புகார் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
புகார் அளிக்கப்பட்டுள்ள கப்பல்கள் தொடர்பில் தற்போது கடலோர காவல்படை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.