கனேடியர்கள் எத்தனை தடவை மதுக்கடைகளுக்கு சென்றார்கள் என கண்காணிக்கப்பட்டுள்ளது?
கோவிட் பெருந்தொற்று காலத்தில் கனேடியர்கள் எத்தனை தடவை மதுக்கடைகளுக்கு சென்றார்கள் என்பது குறித் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது.
கனேடியர்களின் அலைபேசிகளைக் கொண்டு இவ்வாறு அவர்களின் நடமாட்டம் பின்தொடரப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட சில இடங்களுக்கு எத்தனை தடவைகள் கனேடியர்கள் சென்றனர் என்பது குறித்து கண்காணிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விடயம் பற்றி கனேடியர்கள் அறிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கனேடியப் பிரஜைகள் அறியாமலேயே இவ்வாறு அவர்களின் அலைபேசி வழியாக பின்தொடரப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றிற்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கனேடிய பொதுச் சுகாதார நிறுவனத்தினால் இவ்வாறு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இரகசியமான முறையில் தகவல்கள் திரட்டப்பட்டமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.