கர்ப்ப காலத்தில் பெண்கள் கஞ்சா பயன்படுத்தலாமா? கனேடிய ஆய்வாளர் வெளியிட்ட முக்கிய தகவல்
கனடாவில் கர்ப்ப காலத்தில் பெண்கள் கஞ்சா பயன்படுத்துவது கடந்த 20 ஆண்டுகளாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது வெளியான புதிய ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில், குமட்டல், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை போக்க கர்ப்ப காலத்தில் பெண்களின் கஞ்சா பயன்பாடு கடந்த இரண்டு தசாப்தங்களாக உயர்ந்து காணப்படுகிறது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வில், கருப்பையில் இருக்கும் போது குழந்தைகளுக்கு மன அழுத்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, குழந்தைகளில் கவலை, முரட்டுத்தனம் உள்ளிட்டவையும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், நஞ்சுக்கொடியில் மேற்கொண்ட சோதனைகளில் மரபணு மாற்றங்கள் நோயெதிர்ப்பு செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளன.
கர்ப்ப காலத்தில் பெண்கள் கஞ்சா பயன்படுத்துவதால், குழந்தைகளில் வளர்ச்சி பாதிப்பு மற்றும் ஆரோக்கியத்தில் தாக்கம் உள்ளிட்டவையும் கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 700 ரசாயன மூலக்கூறுகள் கொண்ட கஞ்சா பயன்பாட்டினால் பிறக்கும் குழந்தைகளில் மூளையிலும் பாதிப்பு ஏற்படும் என கண்டறிந்துள்ளனர்.
கர்ப்பிணி பெண்களின் கஞ்சா பயன்பட்டை எளிதாக கடந்து செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ள மருத்துவர் ஒருவர், பெண்களுக்கும், மருத்துவர்களுக்கும் இந்த விவகாரம் தொடர்பில் எடுத்துக்கூறுவதுடன், அவர்களையே ஒரு முடிவுக்கு வர முயற்சி செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தாய்மார்களின் கஞ்சா பயன்பாட்டினால் பாதிக்கப்படும் பிள்ளைகளை காப்பாற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.