கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞரின் கொடூர செயல்! நடந்தது என்ன?
கனடாவில் நடந்த கார் விபத்தில் 58 நபரை கொலை செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கனடாவில் உள்ள கார்டினர் எக்ஸ்பிரஸ் வீதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்துகுள்ளானது. இந்த விபத்தை ஏற்படுத்திய நபர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அக்டோபர் 3ஆம் திகதி அதிகாலை 1:30 மணியளவில் Audi R8 என்ற காரை ஒட்டி வந்த கல்யாண் திரிவேத்(31) இவருக்கு முன்னாடி சென்ற Nissan காரை இடித்து தள்ளி விபத்தை ஏற்படுத்தி சம்பவ இடத்தை விட்டு தப்பித்து விட்டார்.
விபத்துக்குள்ளான காரில் 58 வயதுடைய பெண் மற்றும் 61 வயதான ஓட்டுநர் இரண்டு பேரும் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸ் இரண்டு போரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 58 வயதான பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காரை ஓட்டி வந்தவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பித்துவிட்டார். இதையடுத்து பொலிஸ் விபத்தை ஏற்படுத்திய கல்யாணை அடையாளம் கண்டு அவர் மீது கொலை வழக்கை பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.