அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றின் அறைக்குள் திடீரென புகுந்த கார்! 5 பேருக்கு நேர்ந்த நிலை
அமெரிக்கா - டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் மருத்துவமனை ஒன்றின் அவசரகால அறைக்குள் திடீரென புகுந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவத்தில் முதியவர்கள் 3 பேர் மற்றும் 2 இளைஞர்கள் என 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரை செலுத்தி வந்தது 57 வயதான மிச்செல்லே ஹாலேவே என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர் காரிலேயே காயத்துடன் கிடந்துள்ளார். அவருக்கு உடனடியாக சி.பி.ஆர்.சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.
அந்த மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து காரை நிறுத்த முற்பட்டனர். இதனால், பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது.
இது உள்நோக்கம் கொண்டது
இல்லை என வடக்கு ஆஸ்டின் போலீசார் தெரிவித்தனர். ஆஸ்டினில் நடப்பு ஆண்டில் நடந்த 7-வது கொடிய விபத்து சம்பவம் இதுவாகும். இதில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.