தடுப்பூசி விவகாரத்தில் சர்வதேச வர்த்தக அமைச்சர் கறார்!
ஐரோப்பிய யூனியனுக்கு தடுப்பூசி கொடுக்க வேண்டும் என்றால் முதலில் தங்களது தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஐரோப்பிய யூனியனுக்கு தடுப்பூசி கொடுக்க முடியும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது பிரிட்டன்.
கொரோனா வைரஸை எப்படியாவது கட்டுக்குள் கொண்டுவர பிரிட்டன் போராடி வருகிறது. இதன் ஒரு அங்கமாக அங்கு தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் Liz Truss, பிற நாடுகளுக்கு 36 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய, தயாரிப்பு நிறுவனங்களிடம் பிரிட்டன் அரசு கேட்டிருப்பதாகவும் அந்த தடுப்பூசிகளை ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு அனுப்புவதால் தற்போது பிரிட்டனில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு பாதிப்பு எதுவும் ஏற்படக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக நிர்ணயித்த வகையில் தடுப்பூசி செலுத்தப்படும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் தான் அந்த தடுப்பூசிகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என Liz Truss குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் , தடுப்பூசி விநியோகத்தில் ஐரோப்பிய நாடுகளுடனும், வளரும் நாடுகளுடனும் இணைந்து பிரிட்டன் செயல்படும் என சுகாதாரத்துறையைச் சேர்ந்த நதீம் ஸஹாவி கூறியது உண்மைதான் என்றாலும் பிரிட்டன் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு மாதம் முடிவதற்குள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அபாயம் நிறைந்த பிரிட்டனில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு விடவேண்டும் என்கிற இலக்கை நோக்கி நகர்ந்து பிரிட்டன் கொண்டிருக்கிறோம். நிறுவனங்களிடமிருந்து உரிய நேரத்தில் தடுப்பூசிகளை பெறுவதில் தான் இப்போது பிரச்சினைகள் நீடிக்கின்றன.
எனவே பிற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி எவ்வளவு வழங்குவோம் என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது என்றும், பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் திட்டம் முடிவதற்கு முன்னரே பிற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பப்படும் என்றும் Liz Truss தெரிவித்திருக்கிறார்.