அவர்கள் கெஞ்சி கேட்டதால் போர் நிறுத்தம் ; டிரம்ப் சர்ச்சைப் பேச்சு
ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு தன்னிடம் மத்தியஸ்தம் செய்து வைக்க தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளமை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளிடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க விமானப்படை ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கியது. அதை தொடர்ந்து கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தை ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியது.
விமான சேவைகள், கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும்
இரு நாடுகளின் தாக்குதலக்ளை அடுத்து போர் பதற்றம் அதிகரித்த நிலையில் ஈரான் - இஸ்ரேல் நாடுகளிடம் தான் பேசியதால் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை ஈரான் தனது போர் நிறுத்த அறிவிப்பை அந்நாட்டு டிவி சேனல்களில் ஒளிபரப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கி இரண்டு வாரத்திற்குள்ளேயே முடிவுக்கு வந்துள்ள நிலையில், இனி படிப்படியாக விமான சேவைகள், கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது
அதேவேளை இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்திலேயே தொடர்ந்து நான் தான் போரை நிறுத்தினேன் என கூறிய வந்த ட்ரம்ப் தற்போது ஈரான் - இஸ்ரேல் பிரச்சினையிலும் அவ்வாறே கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.