கனடாவில் விபத்து ஏற்படுத்திய தமிழர்க்கு நேர்ந்த கதி
கனடா - டொராண்டோவில் 19 வயதுடைய பெண் பயணி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழ் சாரதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் விபத்து நடந்தது.
லேக் ஷோர் பவுல்வர்ட் மேற்கு மற்றும் ஜேம்சன் அவென்யூ சந்திப்பிற்கு அருகே மார்ச் 6 அன்று விபத்து நடந்தது. இந்த விபத்தில் 19 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் விபத்து தொடர்பில் தமிழ் சாரதி மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஓஷாவாவைச் சேர்ந்த குமரன் சங்கர்குமார் (30) என்பவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதி மீது ஆபத்தான வாகனம் ஓட்டியமை மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியமை காரணமாக மரணம் ஏற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர் எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி ரொறொன்ரோ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.எனினும் சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இதுவரை நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.