போர் குறித்து அதிரடி தகவலை வெளியிட்ட செலென்ஸ்கி
! உக்ரேன், தனது வட்டாரங்களை விட்டுக்கொடுப்பதையோ, ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் செய்துகொள்வதையோ தாம் நிராகரிப்பதாக ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy), டாவோஸ் உலகப் பொருளியல் கருத்தரங்கில் காணொளி மூலம் பங்கேற்றபோது இதனை குறிப்பிட்டார். ரஷ்யாவுக்கு எதிராக அதிகபட்சத் தடைகளை விதிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
எண்ணெய்த் தடைகள் விதிப்பதுடன், ரஷ்யாவின் அனைத்து வங்கிகளையும் தடை செய்து, வர்த்தகத் தொடர்பை முழுமையாகத் துண்டிக்கும்படி ஜனாதிபதி கேட்டுக்கெண்டார்.
அதேவேளை , டோன்பாஸ் வட்டாரத்தில் ரஷ்யப் படையினரை எதிர்த்து உக்ரேனிய வீரர்கள் கடுமையாக போரிட்டு வருகின்ற நிலையில் தினமும் சுமார் 100 உக்ரேனிய வீரர்கள் போரில் மடிவதாக கூறப்படுகின்றது.