ஆபத்தான நிலையில் இரு சிறார்கள்... பொலிஸில் சிக்கிய 16 வயது சாரதி
ஒன்ராறியோவின் வாகன் பகுதியில் சாலை விபத்தில் சிக்கி இரு சிறார்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.
வாகன் பகுதியில் நண்பகல் 12 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. 4 மற்றும் 11 வயதுடைய இரு சிறார்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி இவர்களுடன், அண்டை வீட்டு இளைஞர் ஒருவரும் லேசான காயங்களுடன் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சிறார்கள் இருவரும் தங்கள் சைக்கிளில் அப்பகுதியில் வட்டமிட்டு வந்துள்ளனர். அப்போது சைக்கிள் சங்கிலி சிக்கிக்கொள்ள சிறார்களின் உதவிக்கு அந்த இளைஞர் வந்துள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் இருந்து விலகி, இந்த சிறார்கள் மீது வேகமாக மோதியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் 16 வயது சாரதியை கைது செய்துள்ளதாக யார்க் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தை நேரில் பார்த்தவர்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.