சர்வதேச தொலைக்காட்சி ஒன்றிற்கு சீனாவில் அதிரடி தடை!
சீன அதிபர் ஜி ஜின்பிங் குறித்தும், கொரோனா வைரஸ் பரவலை சீனா கையாண்ட விதம் குறித்தும் உண்மைக்கு புறம்பான விதத்தில் செய்தி வெளியிட்டதாக கூறி பிபிசி வேல்ட் நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது.
பிபிசி தொலைக்காட்சிக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக சீன தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிசி வோல்ட் நியூஸ் தொலைக்காட்சியில் சீனா தொடர்பான செய்திகள் வரம்புகள் மீறி ஒளிப்பரப்பட்டுள்ளது.
செய்திகள் உண்மைக்கு புறம்பாகவும், உகந்த முறையிலும் இல்லை. இது சீனாவின் அரசின் எண்ணங்களை காயப்படுத்தியதுடன், தேசிய ஒற்றுமையை குறைமதிப்பிற்கு தள்ளியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய காரணங்களால் சீனாவில் ஒளிபரப்பு செய்யும் வெளிநாட்டு சேனல்களின் தேவையை பிபிசி இழந்துவிட்டது எனலாம் எனவே இனி ஒரு ஆண்டிற்கு அதன் விண்ணப்பத்தையும் சீனா ஏற்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 4ம் தேதியன்று இங்கிலாந்து தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சீனாவின் அரசு தொலைக்காட்சியான சிஜிடிஎன்(CGTN)-ன் லைசென்ஸை ரத்து செய்தனர்.
இந்த சேனலுக்கான லைசென்ஸ் ஸ்டார் சீனா மீடியா லிமிடெட் நிறுவனம் முறையற்ற வகையில் பெற்றதாக கூறப்பட்டது.