சீனா தனது கடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடும்!
சீனாவில் கோரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சீன்னாவின் கடும் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
பூஜ்ஜிய கொவிட் கொள்கை காரணமாக நாளாந்த வாழ்க்கை வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சீனா தனது கடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் தனது நாடு புதிய நிலையையும் பணியையும் எதிர்கொண்டுள்ளதாக சீனாவின் கொவிட் நடவடிக்கைகளிற்கு பொறுப்பான தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஒமிக்ரோனின் குறைந்துவரும் நச்சுத்தன்மை தடுப்பூசிசெலுத்துவது அதிகரிப்பது மற்றும் கொரோனா பெருந்தொற்று குறித்த பெருமளவு அனுபவம் போன்றவற்றினால் தொற்றுநோய் கட்டுப்பாடு புதிய கட்டத்தையும் பணியையும் எதிர்கொள்கின்றது என துணை பிரதமர் சன் சுன்லன் தெரிவித்துள்ளார்.
19க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள்
சீனாவின் 19க்கும் மேற்பட்ட நகரங்களில் முன்னர் ஒருபோதும் இல்லாத ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ள நிலையிலேயே இவ்வாறான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீன கம்யுனிஸ்ட் கட்சியின் கொவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் முக்கியமானவராக காணப்படும் சன்சுன்லன் பூஜ்ஜிய கொள்கை குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என ஜிங்குவா தெரிவித்துள்ளது.
இதேவேளை சீனாவின் உயர் சுகாதார குழுவை சேர்ந்த அதிகாரிகள் சிலர் கொவிட் கட்டுப்பாடு தொடர்பான சில அணுகுமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும் உள்ளுராட்சி நிறுவனங்கள் பொதுமக்களின் வேண்டுகோள்களிற்கு உடனடியாக தீர்வை காணவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.