சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..3 பேர் உயிரிழப்பு
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தும் 27 பேர் படுகாயமும் அடைந்துள்ளனர்.
சீனாவின் தென்மேற்கில் யுன்னான் மாகாணத்தில் யாங்பி யீ என்ற சுயாட்சி பகுதியில் வெள்ளி கிழமை தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நேற்றிரவு 9 மணியில் இருந்து 11 மணிக்குள் யாங்பி பகுதியில் ரிக்டரில் 5.0 அளவிலான 4 நிலநடுக்கங்கள் பதிவாகின.
இதையடுத்து சீனாவின் டாலிக் பகுதியில், நேற்று இரவு 7.18 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. இதனை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தென்மத்தியப் பகுதியில் உள்ள குங்கைய் மாகாணத்தில், ரிக்டர் 7.3 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கங்களில் இதுவரை 3 பேர் உயிரிழந்ததாகவும், 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிவிப்பை சீனா அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.