சீனாவில் அறிகுறிகளே இல்லாமல் 300 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி!
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் 541 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணித்தியாலத்தில் அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 393 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 309 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது.
மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,29,594 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.