கிறிஸ்மஸ் அணிவகுப்புக்குள் திடீரென புகுந்த காரால் ஏற்பட்ட விபரீதம் 5 பேர் பலி ; 40 பேர் காயம்
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கிறிஸ்மஸ் அணிவகுப்புக்குள் கார் ஒன்று புகுந்ததால் 5 பேர் பலியானார்கள் 40 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நடைபெற்ற அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
அணிவகுப்பு நடந்துகொண்டிருந்தபோது திடீரென ஒரு சிவப்பு நிற கார் வேகமாக வந்து தடுப்புகளை உடைத்துக்கொண்டு அணிவகுப்பில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
கார் மோதியதில் 5 உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக பொலிஸ் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர் ஸ்டீவன் ஹோவர்ட், 11 பெரியவர்கள் மற்றும் 12 குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய நபரை பொலிசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இது குறித்த விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.