சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் பரிதாபமாக 9 குழந்தைகள் பலி
மேற்கு சூடானில் உள்ள டார்பூர் மாகாணத்தில் உள்ள எல்பேஷரில் துணை ராணுவப் படையினர் திடீர் வான்வழி தாக்குதல் மூலம் தாக்கியதில் 9 குழந்தைகைள் உயிரிழந்ததுடன் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையிலான அதிகாரப் போட்டி காரணமாக உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிடப்பிட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பசி மற்றும் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். .