நள்ளிரவில் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்றிய இராணுவம்! கொழும்பில் பதற்ற நிலை
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே நேற்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றிரவு கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாககத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்தி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
உடனடியாக அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்பு வேலிகளை அகற்ற முயற்சித்த நிலையில் அதை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அப்பறப்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.