விக்டோரியா விமான நிலையத்தில் மர்மப்பொருள்? விமானப் பயணங்கள் ரத்து
விக்டோரியா விமான நிலையத்தில் மர்மப்பொருள் அச்சம் காரணமாக விமானப் பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையத்தின் வெளிச் செல்லும் பகுதியில் இந்த சந்தேகத்திற்கு இடமான மர்பப் பொருள் கண்டு பிடிக்க்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கனேடிய விமான பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் குறித்த பொதியை மீட்டு, பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
முன் எச்சரிக்கை அடிப்படையில் விமான நிலையம் சில மணித்தியாலங்கள் மூடப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மர்மப் பொருள் மீட்கப்பட்ட பகுதிக்கு செல்வதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியிருந்தனர்.
இந்த மர்மப் பொருள் அடங்கிய பொதியினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.