பொதுமக்கள் முன்னிலையில் அருவருப்பான செயல்: ரொறன்ரோ பொலிசாரிடம் சிக்கிய நபர்
பொதுமக்களிடம் அருவருப்பாக நடந்து கொண்டதாக ஹாமில்டன் பகுதி நபர் விசாரணையை எதிர்கொள்வதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 2.55 மணியளவில் கிங் மற்றும் ஷா தெருவீதிகள் உட்பட்ட பகுதியில் குறித்த நபர் அருவருப்பாக நடந்து கொண்டதாக பொதுமக்களிடம் இருந்து புகார் அழைப்புகள் வந்ததாக தெரிவித்துள்ளனர்.
55 வயதான அந்த நபர் இவ்வாறு நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல எனவும், ஜூலை 2020 முதல் மே 2021 வரையான காலகட்டத்தில் ரொறன்ரோவின் பல பகுதிகளில் முகம் சுழிக்கும்படி, அருவருப்பாக நடந்து கொண்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் புகாரையடுத்து முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒருபகுதியாக 55 வயதான ஹாமில்டன் பகுதி குடியிருப்பாளர் Brent Tetlock கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் மீது 19 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், சனிக்கிழமை அவர் ரொறன்ரோ நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை நாடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.