மூன்று ஆண்டுகளாக சிக்காத குற்றவாளிகள்... கொல்லப்பட்ட கனேடிய இளைஞரின் பெற்றோர் எடுத்துள்ள முடிவு
தங்கள் மகன் கொல்லப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில், கொலை குறித்து துப்புக்கொடுத்தால் பெருந்தொகை ஒன்றை பரிசாக அளிப்பதாக கொல்லப்பட்டவரின் பெற்றோர் அறிவித்துள்ளனர்.
Gale மற்றும் Nick Staikos தம்பதியரின் மகன் Matthew Staikos (37). 2018ஆம் ஆண்டு, மே மாதம் 28ஆம் திகதி, Yorkville என்ற இடத்தில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் Matthew. சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளாகியும், இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை. Matthew வெற்றிகரமாக பவனி வந்த ஒரு பிஸினஸ்மேனாக இருந்தார்.
ரொரன்றோ பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் முடித்த அவர் பெற்றோரிடம் மிகவும் அன்பு கொண்டவராவார். மகனை இழந்து வாடும் பெற்றோர், இந்த வழக்கு எப்படியாவது முடிவுக்கு வரவேண்டும் என விரும்புகிறார்கள்.
ஆகவே, தங்கள் மகனுடையை கொலை தொடர்பாக யாராவது பயனுள்ள துப்புக் கொடுத்தால், அவர்களுக்கு 250,000 டொலர்கள் பரிசு வழங்குவதாக Gale, Nick Staikos தம்பதியர் அறிவித்துள்ளார்கள்.