பிரித்தானியாவில் ஒரே நாளில் 44,917 பேருக்கு கொரோனா பாதிப்பு!
பல வளர்ந்த நாடுகளில் கொரோனா வைரஸுன் வீரியம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் பிரித்தானியாவும் முக்கிய இடம் பெற்றுள்ளது.
இந்தியா, கனடா, சுவிஸ் உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. வேகமாக நடைபெறும் கொரோனா தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு நிலைமை மேம்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவில் நேற்று 44,917 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்து 89 ஆயிரத்து 926 ஆக உயர்ந்திருக்கிறது.
இதேவேளை கொரோனா தொற்றால் மேலும் 150 பேர் உயிரிழந்து மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,43,972 ஆக உயர்ந்துள்ளது. இதே நிலையில், நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.