கொரோனாவை முற்றிலும் அழிக்க முடியாது; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனாவை முற்றிலும் அழிப்பதென்பது முடியாத காரியம் என உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.
மேலும் கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கயிருக்கும் விளையாட்டு வீரர்களில் யாரெல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விரைவாக கண்டறிந்து தனிமைப்படுத்தினால் மட்டுமே நோய் பரவலை தடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் மனிதர்கள் கொரோனா டெல்டாவின் மற்றொரு மாறுபாட்டை விரைவில் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.