சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா; அச்சத்தில் மக்கள்
சீனாவில் கோவிட் பாதிப்பில் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழ்ந்து உள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது பற்றிதொடர்பில் சீனா ஆலோசித்து வருவதாக கூறப்படுகின்றது.
தலைநகர் பெய்ஜிங்கில் 91 வயது மூதாட்டியும் 88 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கோவிட் பாதிப்பு மீணடும் அதிகரித்து விடுமா என்ற அச்சம் சீனர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் கோவிட் பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்த 27 ஆயிரம் பேரில் 2365 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களை தனிமைப் படுத்தி வைக்கும் காலத்தை அதிகரிப்பது, பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட அம்சங்களை செயல்படுத்துவது தொடர்பில் சீன அரசாங்கம் அலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.