சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா! ஒரே நாளில் இத்தனை பேரா?
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனினும், கடந்த 2 மாதங்களாக அங்கு நாளாந்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில், கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது.
இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 862 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது.
மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,27,980 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.