ஜெர்மனியை புரட்டி எடுக்க கொரோனா! கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த திட்டம்
ஜெர்மனியை கொரோனா 4-வது அலை புரட்டிப் போட்டு வரும் நிலையில் அங்கு தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பும் 75 ஆயிரத்தை கடந்து புது உச்சம் தொட்டதுள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த 24 மணி நேரத்தில் 351 பேர் தொற்றுக்கு பலியான நிலையில் 75 ஆயிரத்து 961 பேர் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த காபந்து அரசின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.