ஈரானில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்!
ஈரான் நாட்டில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கப்பட்டது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதல் டோஸ் மருந்து செலுத்தப்பட்டது.
சுகாதார பணியாளர்களின் தியாகத்தின் நினைவாக, கொரோனாவுக்கு எதிரான தேசிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கியிருப்பதாக அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். ஈரானில் இதுவரை 14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 58,600 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் அரசு ரஷியாவிடம் இருந்து 20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது. இதில் முதல்கட்ட மருந்துகள் கடந்த வியாழக்கிழமை வந்தன. அடுத்து வரும் 18 மற்றும் 28ம் தேதிகளில் மீதமுள்ள மருந்துகள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.