ஆஸ்திரியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! சேன்ஸலர் அலெக்சாண்டர் எடுத்த அதிரடி முடிவு
ஆஸ்திரியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்நாட்டு சேன்ஸலர் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வுஹான் பகுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை குறைந்தபாடில்லை. இரண்டாவது, மூன்றாவது என பல அலைகள் புதிதாக உருவாகி மக்களை கொடூரமாக தாக்கி வருகின்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மோசமாக பரவி வருகின்றது. ஆஸ்திரியாவில் 4வது அலை தாக்கி வருகின்ற நிலையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டில் 5வது அலை உருவாகலாம் என்று மக்கள் அஞ்சுகின்றனர். எனவே தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது.
வருகின்ற திங்கட்கிழமை முதல் ஆஸ்திரியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு சேன்ஸலர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த ஊரடங்கு குறைந்தது 10 நாட்கள் நீட்டிக்கப்படும் என்று வெளியாகியுள்ளது.