இங்கிலாந்தில் ஒரே நாளில் 15,845 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
இங்கிலாந்தில் மேலும் 15,845 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 15,845 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
அங்கு கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39,45,680 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் 373 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 465 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 19.15 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.