அமெரிக்காவின் கொரோனா மாத்திரைக்காக போட்டிப்போடும் நாடுகள்....சுவிஸ் நாட்டுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை அண்மையில் அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. இதனை ஒப்பந்தம் செய்ய போட்டிபோட்டு வருகின்றன.
அமெரிக்காவின் மெர்க் & கோ நிறுவனம் என்ற நிறுவனம் காரோணவுக்கு எதிராக மொளனுப்பிறவிற்( molnupiravir) என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. இந்த மாத்திரையானது கொரோனாவை கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் வெகுவாக குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த மாத்திரையினைப் பெற உலக நாடுகள் அனைத்தும் போட்டிபோட்டு வருகின்றன.
ஆனால் சுவிட்சர்லாந்து மட்டும் இந்த அமெரிக்கா நிறுவனத்தை அணுகவில்லை. இந்த மாத்திரை குறித்த தகவல் வெளியானவுடன், சுவிட்சர்லாந்தின் அரசியல்வாதிகள் பெடரல் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
பெடரல் நிர்வாகம், விரைவில் இந்த மாத்திரையை முன்பதிவு செய்தால் தான் விரைவாக கிடைக்கும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.