கனடாவில் கோவிட் நோயாளிகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்
கனடாவில் கோவிட் நோயாளிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபோரில் 11 வீதமானவர்கள் மீளவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர் அல்லது மரணிக்கின்றனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்து ஒரு மாத காலத்திற்குள் இவ்வாறு மீளவும் வைத்தியசாலையில் இவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் அல்லது உயிரிழக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய மருத்துவ ஒன்றியத்தினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களில் 9 வீதமானவர்கள் மீளவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுடன், இரண்டு வீதமானவர்கள் உயிரிழந்து விடுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலைகளில் கூடுதல் காலம் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களே அதிகளவில் மீளவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வயது முதிர்ந்த ஆண் கோவிட் தொற்று உறுதியாளர்களே அதிகளவில் இவ்வாறு வைத்தியசாலையில் மீளவும் அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
டெல்டா திரிபுடன் ஒப்பீடு செய்யும் போது ஒமிக்ரோன் திரிபின் பாதிப்பு குறைவானது என ஆய்வுகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.