கனேடிய நகரமொன்றில் முதன்முறையாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படாத ஏழு நாட்கள்
கனேடிய நகரமொன்றில், இந்த ஆண்டில் முதன்முறையாக ஒருவருக்குக் கூட கடந்த ஏழு நாட்களில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
கனடாவின் தலைநகரான Ottawaவில், ஜூலை 7 முதல், இதுவரை ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அத்துடன், ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியானதாகவும் தகவல் இல்லை. Ottawa மருத்துவமனையில், வெறும் இரண்டு பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்கள், தீவிர சிகிச்சைப் பிரிவிலோ ஒருவர் கூட இல்லை! Ottawaவாசிகள் 749,033 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது கொடுக்கப்பட்டுவிட்டது.
498,340 பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டாயிற்று.
கொரோனா தடுப்பூசி கொரோனா வைரஸை வென்று வருவதாக Ottawa மருத்துவ அலுவலரான Dr. Vera Etches தெரிவித்துள்ளார்.